• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு பள்ளிகளை பாதுகாத்திட கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

June 13, 2019 தண்டோரா குழு

கோவையில் அரசு பள்ளிகளை பாதுகாத்திட கோரி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அரசு பள்ளிகளை பாதுகாத்திடுதல், நீட் தேர்வை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவல் துறை தடுப்புகளை மீறி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவிகள் உட்பட 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க