June 7, 2019
தண்டோரா குழு
ஆந்திராவில் 5 பேர் துணை முதலமைச்சர்களாக நாளை பதவியேற்க உள்ளனர்.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 171 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சுமார் 151 தொகுதிகளை கைப்பற்றி ஆந்திர மாநிலத்தின் முதல்வராக முதன் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார்.
எனினும், ஆந்திர மாநில அமைச்சரவை உருவாகவில்லை.இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் புதிய திட்டங்கள், அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுவது என்பது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஜெகன் ஆலோசனை செய்தார். கூட்டத்தின் இறுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளிட்டார்.
மேலும், இந்த கூட்டத்தில், 5 பேரை ஆந்திராவின் துணை முதலமைச்சர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ முகமது முஸ்தப்பா சாஹிப் தெரிவித்துள்ளார். பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் உள்ளிட்ட 5 வெவ்வேறு பிரிவில் இருந்து துணை முதலமைச்சர்களை நியமிக்கப்பட உள்ளனர்.