• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை சீர் வரிசையுடன் வரவேற்ற கிராம மக்கள் !

June 3, 2019 தண்டோரா குழு

கோவை கே.ஜி.சாவடி அருகே கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களை கிராம மக்கள் சீர் வரிசையுடன் வரவேற்றனர்.

கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் கோவை எட்டிமடை அடுத்த கே.ஜி.சாவடியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு இன்று வந்த மாணவர்களை அந்த கிராம மக்கள் சீர் வரிசையுடன் வரவேற்றனர். பொதுமக்கள் ஒன்று கூடி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள அனைத்து வகுப்பறைகளுக்கான முதலுதவி பெட்டி, பிரோ, சேர், குடம் என 42 பொருட்களை பள்ளி மாணவர்களுக்காக வழங்கினர்.

கடந்த ஆண்டு இப்பள்ளியில் துவங்கப்பட்ட பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கிய கிராம மக்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க