June 3, 2019
பொள்ளாச்சி அருகே உள்ள புளிய கண்டியில் வனத்துறை வாகனத்தை காட்டு யானை சேதப்படுத்தி சென்றது.
பொள்ளாச்சி அருகே உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட நவமலை பகுதியில் கடந்த 25ம் தேதி ரஞ்சனா என்ற சிறுமியும் 26ம் தேதி மாகாளி என்பவரும் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர்.இதையடுத்து வனத்துறையினர் மூன்று குழுக்கள் அமைத்து காட்டு யானை கண்காணித்து விரட்டும் பணியில் கடந்த ஒரு வார காலமாக வனத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ரஞ்சனாவை தாக்கிய காட்டு யானை சமாதிக்கு சென்று இரவு முழுவதும் பிளறி உள்ளது இதை அங்குள்ள மழை வாழ் மக்கள் தெரிவித்தனர். காட்டு யானை இரவு வனத்துறையினர் புளிய கண்டி பகுதி விரட்டினர். தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை வனத்துறையினர் சென்ற வாகனத்தை நோக்கி ஆக்ரோஷ் மாக வந்து வாகனத்தை தந்தம் மூலம் தூக்கி தள்ளியது வனத்துறையினர் கூச்சல்ட்டும் ராக்கெட் விட்டு காட்டு யானை விரட்டினர். மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் தெரிவித்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.