• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பீகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு

September 30, 2016 தண்டோரா குழு

பீகாரில் முழு மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.பீகார் அரசு கொண்டு வந்த மது தடைச்சட்டம் சட்ட விரோதமானது என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நிதிஷ்குமார் சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.அதன்படி பதவி ஏற்றதும் ஏப்ரல் மாதம் முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் அரசுக்கு 5000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் 10 ஆயிரம் கோடி மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தினை பீகார் அரசு மக்களிடையே முன்வைத்து வந்தது.

இதற்கிடையே சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே பீகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான மதுவிலக்கு சட்டத்தை நீக்கக்வேண்டும் என பாட்னா உயர்நீதிமன்றத்தில் மது விற்பனை சங்கம் மற்றும் தனிநபர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் அகமது அன்சாரி, நீதிபதி நபநிதிபிரசாத் சிங் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது . அதில் மது அருந்துதல் மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பாக ஏப்ரல் 5-ம் தேதி கொண்டு வரப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் பூரண மது விலக்கு சட்டம் சட்டவிரோதம் என்றும், இதனை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தீர்ப்பளித்தனர்.

மேலும் படிக்க