• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

September 30, 2016 தண்டோரா குழு

கோவை போத்தனூர் அருகே மர்ம நபர்கள் சிலர் மசூதி மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே மேட்டூர் அம்மன்புதூர் என்ற இடத்தில் ஹிதயத்துல்லா சுதின் சுன்னத் ஜமாத் என்ற மசூதி அமைந்துள்ளது.இந்த மசூதி அருகேயே அதன் நிர்வாகி சுலைமான் என்பவரது வீடு அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் மசூதி மீதும் அதன் அருகே இருந்த சுலைமான் வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசி சென்றுள்ளனர்.இரு பெட்ரோல் குண்டுகள் மசூதி நிர்வாகி சுலைமான் வீட்டின் முன்பாகவும், காலி பாட்டில்கள் மசூதியின் அருகிலும் விழுந்தன.

தொழுகைக்காக வந்த இஸ்லாமியர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போத்தனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி இஸ்லாமியர் ஒருவர் கூறுகையில்,

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்டது முதல் கலவர நோக்கத்துடன் பள்ளிவாசல்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க