• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சராகிறாரா ?

May 30, 2019 தண்டோரா குழு

17வது மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையில், தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு ஒரு தொகுதியில் தான் வெற்றி கிடைத்தது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார் வெற்றி பெற்றார். இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் யாருக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கும் யாருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்று கடும் போட்டி நிலவியது.

மேலும்,அதிமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு உடனடியாக வரும்படி டெல்லியிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

இந்த அழைப்பு பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் அழைப்பு என்பதலும், இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில் வந்துள்ள அழைப்பு என்பதாலும் மிகமுக்கியமாக கவனிக்கப்படும் ஒன்றாக உள்ளது. இதனால் ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும் இன்று மாலை அதிகாரபூர்வ அமைச்சரவை பட்டியல் வெளியானவுடன் என்ன நிலை என்று தெரிந்துவிடும்.

இன்று மாலை 4.30 மணியளவில் அமைச்சரவையில் இடம் பெரும் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

மேலும் படிக்க