• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆறு மாதமாக குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து மக்கள் சாலை மறியல்

May 27, 2019

ஆறு மாதமாக குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சோமையம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் ஆறு மாத காலமாக சரியாக வழங்கப்படாததால், அடிக்கடி சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியலில் ஈடுபட்டால் மட்டுமே , ஒரு வாரத்திற்கு தண்ணீர் முறையாக வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அரசு அதிகாரிகளிடம் புகாராளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால், இப்பகுதி மக்கள் குடிநீர் மற்றும் உப்புத்தண்ணீரை காசு கொடுத்து வாங்கவேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கணுவாய் ஆனைகட்டி சாலையில் இன்று காலை மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சனையால் சரியாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிரந்தர தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க