• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒருவர் கைது

May 21, 2019 தண்டோரா குழு

கோவையில் 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் ராம்நகர் பகுதியை சேர்ந்த ராதா என்ற சிறுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மதியழகனின் ஆட்டோவில் சிறுமி பள்ளிக்கு சென்றுவருவது வழக்கம். சிறுமியின் பெற்றோர் வீட்டை மாற்றி கோவை குனியமுத்தூர் குளத்துபாளையம் பகுதியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில்,மதியழகன் தொடர்ந்து சிறுமியை பார்பதற்காக குளத்துபாளையம் வந்து சென்றுள்ளார்.

நான்கு நாட்களுக்குமுன் மதியழகன் சிறுமியை கடத்தி சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் குணியமுத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து மதியழகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்கள்.

மேலும் படிக்க