• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குறிச்சி குளத்தில் குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

May 21, 2019 தண்டோரா குழு

கோவை குறிச்சி குளத்தில் குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குறிச்சி குளத்தில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுவதால் குறிச்சி பிரிவு, காளவாய் பகுதியில் உள்ள சிறுவர்கள் அந்த குளத்தில் விளையாடுவதும் குளிப்பதும் வழக்கம். அதே போல இன்றும் காளவாய் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது என்பவருடைய மகன் இர்பான் தனது நண்பகளுடன் குளத்தில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கி உள்ளார். இவருடன் சென்ற சிறுவர்கள் பொற்றோர்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இனைந்து நீண்டநேரமாக போராடி நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்ததில் அச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தை குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க