• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குறிச்சி குளத்தில் குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

May 21, 2019 தண்டோரா குழு

கோவை குறிச்சி குளத்தில் குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குறிச்சி குளத்தில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுவதால் குறிச்சி பிரிவு, காளவாய் பகுதியில் உள்ள சிறுவர்கள் அந்த குளத்தில் விளையாடுவதும் குளிப்பதும் வழக்கம். அதே போல இன்றும் காளவாய் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது என்பவருடைய மகன் இர்பான் தனது நண்பகளுடன் குளத்தில் குளிக்கும் பொழுது நீரில் மூழ்கி உள்ளார். இவருடன் சென்ற சிறுவர்கள் பொற்றோர்களுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இனைந்து நீண்டநேரமாக போராடி நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்ததில் அச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தை குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க