• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தூக்கியெறியப்பட்ட குழந்தை தனியார் காப்பகத்தில் ஒப்படைப்பு

May 20, 2019 தண்டோரா குழு

அரசு மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே தூக்கியெறியப்பட்ட குழந்தை தனியார் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனை பின்புறம் கடந்த வியாழக்கிழமை இரவு பிறந்து 7 நாட்களான ஆண் குழந்தையை கட்டப்பையுடன் தூக்கி வீசி சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் குழந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் குழந்தையை தனியார் காப்பகத்திற்கு (லைப் லைன்) ஒப்படைத்தனர். மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அதிகாரி முன்னிலையில் அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி செளந்தரவேல் ஒப்படைத்தார். ஆண் குழந்தைக்கு அர்ஜூன் என பெயர்சூட்டி மகிழ்ந்தனர்.

மேலும் படிக்க