• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் – சோனியா காந்தி

September 29, 2016 தண்டோரா குழு

நாட்டின் பாதுகாப்பிற்காக மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்திய எல்லையில் நடைபெற்று வரும் ராணுவ தாக்குதல் குறித்து சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, நாட்டின் பாதுகாப்பிற்காக மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் துணை நிற்கும் என்றும்,இந்தியாவிற்கு எதிராக எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்று வருவதற்கு தங்களுக்கு பொறுப்பு உள்ளது என்பதை தற்பொழுதாவது பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளும் என காங்கிரஸ் நம்புகிறது என தெரிவித்தார்.

மேலும் உள்நாட்டில் உற்பத்தி ஆகும் தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க