• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 4 தொகுதி இடைத்தேர்தல்: 9 மணி வரை வாக்குப் பதிவு நிலவரம்

May 19, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் நடக்கும் இடைதேர்தலில், காலை ஒன்பது மணி வரை நடந்த வாக்குப் பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம்தேதி நடைபெற்றது. இதற்கிடையில், தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. அதைப்போல் தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது.இந்த 4 தொகுதிகளில் மொத்தம் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் அரவக்குறிச்சியில் மட்டும் 63 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். சுமார் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து,இன்று காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.இந்நிலையில், நான்கு தொகுதிகளிலும் காலை ஒன்பது மணி வரை நடந்த வாக்குப் பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.காலை 9 மணி வரை தமிழக இடைத்தேர்தலில், சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் 11 சதவிகிதமும் ஒட்டப்பிடாரத்தில் 14.53 சதவிகித வாக் குப்பதிவும் அவரக்குறிச்சியில் 10.51 சதவிகிதமும் திருப்பரங்குன்றம் தொகுதியில் 12.05 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க