• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூர் சட்டமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து பிரம்மாண்ட இருசக்கர பேரணி

May 17, 2019 தண்டோரா குழு

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து பிரம்மாண்ட இருசக்கர பேரணி நடைபெற்றது.

சூலூர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து பிரம்மாண்ட இருசக்கர பேரணி இன்று நடைபெற்றது. இருகூரில், துவங்கிய இந்த பிரம்மாண்ட பேரணியை சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு துவக்கி வைத்தார். திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிச்சாமியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி நடந்த இந்த இருசக்கர பேரணி இருகூரில் இருந்து துவங்கி பள்ளபாளையம், கண்ணம்பாளையம், இராவுத்தூர், இராசிபாளையம், மாதப்பூர் , ராமாச்சிபாளையம், சோமனூர், சாமளாபுரம், செங்கத்துறை, காடாம்பாடி, காங்கேயம்பாளையம் ஆகிய ஊர்களின் வழியாக பேரணியாக வந்து சூலூரை வந்தடைந்தது.

இப்பேரணியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க