• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது – கமல் எச்சரிக்கை

May 17, 2019 தண்டோரா குழு

என்னை கைது பண்ணட்டும் எனக்கு ஒன்றும் இல்லை ஆனால் கைது செய்தால் இன்னும் பதற்றம் அதிகரிக்கும்என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை விமானத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

நான் சொன்னதில் தவறான கருத்துரை ஒன்றும் கிடையாது. பல வருடங்களாக சொல்லப்பட்டது ஆனால் இப்போது இது ஒரு காரணத்திற்காக கவனிக்கப்படுகிறது. இதே பரப்புரையை மெரினாவில் 15 நாட்களுக்கு முன்பு சொல்லியிருக்கிறேன். மெரினாவில் பேசிய கருத்தை தான், மீண்டும் பேசினேன். ஆனால் அது தேர்தலுக்காக பெரிதுப்படுத்தப்படுகிறது. அப்போது நம்பிக்கையுடன் இருந்தவர்கள் இப்போது நம்பிக்கை குறைந்தவுடன் விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.நான் எதையும் உருவாக்கவில்லை அவர்களாகவே உருவாக்கி விட்டிருக்கிறார்கள்.

மோடி அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை, சரித்திரம் பதில் சொல்லும். பிரதமர் மோடி அபார ஞானம் உள்ளவர் என்று பலரும் நினைத்து கொண்டிருப்பதால், அவருக்கு பதில் சொல்ல சரித்திர ஆசிரியர்கள் உள்ளனர். நாங்கள் அமைதியை காக்க எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறோம். நான் கைதுக்கு பயப்படவில்லை பரப்புரை இருக்கிறது அதை செய்ய ஆவல்தான். என்னை கைது பண்ணட்டும் எனக்கு ஒன்றும் இல்லை ஆனால் கைது செய்தால் இன்னும் பதற்றம் அதிகரிக்கும் எனவே என்னயுடைய வேண்டுகோள் இல்லை அறிவுரை அதை செய்யாமல் இருப்பது நல்லது.

சூலூரில் பதற்றம் நீடிக்கும் பட்சத்தில் ஏன் அங்கு தேர்தலை ரத்து செய்யக் கூடாது. நேற்றை பிரச்சாரக்கூட்டத்தில் பிரச்சாரம் உருவாகவில்லை, உருவாக்கப்படுகிறது. தீவிரவாதம் எல்லா மதங்களிலும் உள்ளது. அதை தான் வரலாறு கூறுகிறது. என் நாக்கை அறுக்க வேண்டும் என்ற ராஜேந்திர பாலாஜியின் கருத்து அவரின் உண்மையான குணத்தை காட்டுகிறது. இந்துக்கள் யார், ஆர்.எஸ்.எஸ் யார் என்பதை பிரித்து பார்க்க வேண்டும். அரசியல் குறுக்கீட்டால் சூலூர் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க