• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்

May 17, 2019 தண்டோரா குழு

கோவை சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் சாலை விபத்தில் சிக்கியவரை அமைச்சர் அவர்கள் மீட்டு உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

கோவை சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் அமைச்சர் எஸ் பி வேலுமணி இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு கோவை சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் வரும் பொழுது சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சிக்கினார் அப்போது அங்கு வந்த அமைச்சர் எஸ் பி வேலுமணி உடனடியாக அவரது பின்னால் வந்த வாகனத்தில் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் மேலும் அமைச்சர் அவர்கள் சாலை விபத்தில் யார் சிக்கினாலும் அதை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மருத்துவமனையில் நிர்வாகிகளை அழைத்துப் பேசி உடனடியாக முதலுதவி செய்யுங்கள் என மருத்துவர்களிடம் பேசினார் மேலும் சாலை விபத்தில் சிக்கிய நபரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் மேலும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க