• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோட்சேவை ஏன் ‘இந்து’ என குறிப்பிட்டு கூறினீர்கள்? – கமலுக்கு நடிகர் விவேக் ஓபராய் கேள்வி

May 13, 2019 தண்டோரா குழு

கோட்சே ஒரு தீவிரவாதி என நீங்கள் கூறி இருக்கலாம். ஏன் ‘இந்து’ என குறிப்பிட்டு கூறினீர்கள்? என கமல்ஹாசனுக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன்,

முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். கமலின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

அன்புள்ள கமல், நீங்கள் ஒரு சிறந்த கலைஞன். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ, அதேபோல் தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது. கோட்சே ஒரு தீவிரவாதி என நீங்கள் கூறி இருக்கலாம். ஏன் ‘இந்து’ என குறிப்பிட்டு கூறினீர்கள்?. நீங்கள் வாக்கு கேட்கும் இடத்தில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் உள்ளார்கள் என்ற காரணத்திற்காகவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு மிகச்சிறு கலைஞனாக, ஒரு மாபெரும் கலைஞனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒன்றே. தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள். ஜெய்ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க