• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

80 வயது முதியவரை போன்று பங்களாதேசில் பிறந்த குழந்தை

September 29, 2016 தண்டோரா குழு

ஒரு அரிய மருத்துவ நோயால் முகத்தில் சுருக்கங்களும், உள் இழுக்கப்பட்ட கண்களும் 80 வயதுடையவர் போன்ற தோற்றத்துடன் பங்களாதேஷ் நாட்டில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

இந்த வித்தியாசமான பிறப்புடைய குழந்தை பங்களாதேஷ் நாட்டின் மகுரா என்னும் இடத்தில் பிறந்துள்ளது. ப்ரோகேரியா என்னும் அரிய மருத்துவ நிலைமை காரணமாக இவ்வகையான அபூர்வ பிறப்பு நிகழ்கிறது. இந்த அரிய நோயால் பிறக்கும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட எட்டு முறை அதிகமான வளர்ச்சி காணப்படும்.

அந்த கிராமத்து மக்கள் அக்குழந்தையை பார்பதற்கு மருத்துவமனைக்கும் ஆர்வமாக சென்று வருகின்றனர். அக்குழந்தையின் தந்தை, பிஸ்வஜித் பட்ரோ, ஒரு ஏழை விவசாயி. அதன் தாயார் பருள் பட்ரோ. தங்கள் குடும்பத்தின் புதிய அங்கத்தினரை வரவழைக்க மிகுந்த ஆவலோடு இருந்தனர். அவர்களுடைய மூத்த மகள் அபர்ணா, அவளுடைய தாயை போல் உள்ளதாகும், அவர்களுடைய மகனான அந்த குழந்தை தன்னை போல் உள்ளதாகவும், அதை பார்க்கும் போது சோகமாகவோ அல்லது என் மகன் இவ்வாறு பிறந்துவிட்டானே என்று தான் வேதனை அடைந்ததும் இல்லை என்று பிஸ்வஜித் கூறினார்.

இவ்வகை அரிய நோயால் பிறக்கும் குழந்தைகள் விரைவிலேயே இறந்து விடும். ஆனால், அக்குழந்தை நல்ல முறையில் ஆரோக்கியமாக வளரும் என்று அதன் குடும்பத்தினர் உறுதியாக நம்புகின்றனர். மேலும், அக்குழந்தையின் தந்தை அவருடைய வயதிற்கு அதிகமாக தெரிவதுபோல் அக்குழந்தையும் தெரிகிறது. அக்குழந்தைக்கு எந்த ஒரு பிரச்னையும் வராமல் நீண்ட ஆரோக்கியமான வாழ்கை வாழும் என்று நம்புவதாக, அதன் மாமா தெரிவித்தார்.தற்போது தாயும் சேயும் நன்றாக இருப்பதாக அம்மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க