May 11, 2019
தண்டோரா குழு
டெல்லியில் முதலிரவுக்கு ஒத்துக்க மறுத்த மனைவியை அடித்து உதைத்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டில்லியை சேர்ந்த தர்மேந்திர சர்மா என்பவருக்கும் அமதாபாத்தை சேர்ந்த பிரியங்கா திவாரி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. மணப்பெண் வீட்டில் இருவருக்கும் முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது,திருமண நாள் அன்று ஏற்பட்ட உடல் அலுப்பை காரணமாக முதலிரவின் போது சர்மாவுடன் உடலுறவு கொள்ள திவாரி சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சர்மா கடும் கோபமடைந்துள்ளார்.எனினும் அது தன்னுடையை மனைவியின் வீடு என்பதால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லைபொறுமையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் திருமணமான ஜோடி டில்லிக்கு சர்மாவின் வீட்டிற்கு வந்தனர். அப்போது சர்மா தனது மனைவி திவாரியை முதலிரவு அன்று உடலுறவுக்கு ஒத்துழைக்காததை கூறிஅடித்து கொடுமைபடுத்தியுள்ளார். இதையடுத்து, திவாரி இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தர்மேந்திர சர்மா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.