• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரியங்கவுக்கு பதிலாக மம்தாவின் முகம்! – பாஜக நிர்வாகி கைது!

May 11, 2019

பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தில் அவரது முகத்திற்கு பதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா அண்மையில் நியூயார்க் நகரில் நடந்த மெட்காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் வித்தியாசமான முறையில் அணிந்திருந்த ஆடையும், தலைமுடியும் நெட்டிசன்களால் மிகவும் விமர்சிக்கப்பட்டது. அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் பாஜக பெண் நிர்வாகியான பிரியங்கா சர்மா என்பவர், பிரியங்கா சோப்ராவின் அந்த புகைப்படத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் விபாஸ் ஹஸ்ரா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், ,’ பிரியங்கா சர்மாவின் செயல், சமூக நல்லிணக்கத்தை கெடுத்து, வன்முறைக்கு அடிகோலிவிடும். முதல்வர் மம்தா பானர்ஜியை அவமானப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல்,
மேற்கு வங்க கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி உள்ளார். இது சைபர் குற்றமாக கருதலாம்,’ என்று தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார்,’ பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மாவை கைது செய்து ஹவுரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் படிக்க