• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கழிவறையில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை

May 8, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி என்ற நோயாளி கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சீதா இவர்கள் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் அங்கு உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். ஏற்கனவே ஆஸ்மா நோய் முதுகுத்தண்டு வலியால் பாதிக்கப்பட்டு இருந்த கோவிந்தசாமிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண்கள் பிரிவில் உள்நோயாளியாக அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று நீண்ட நேரம் படுக்கையறையில் கோவிந்தசாமியை காணவில்லை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் கோவிந்தசாமியை காணவில்லை பின்னர் அங்குள்ள கழிவறையில் சென்று பார்த்தபோது அவர் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததைக் கண்டு அங்குள்ள நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர், பின்னர் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறையில் வைத்தனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணங்கள் உண்டா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க