• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்கள் வீட்டினுள் பாதாள அறையோ, கட்டிலோ அல்லது படிகட்டுகளோ இல்லை – லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி

May 6, 2019 தண்டோரா குழு

எங்கள் வீட்டினுள் பாதாள அறையோ, கட்டிலோ அல்லது படிகட்டுகளோ இல்லை என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கூறியுள்ளார்.

நாடு முழுவதிலும் பிரபல லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகின. இந்நிலையில், எங்கள் வீட்டினுள் பாதாள அறையோ, கட்டிலோ அல்லது படிகட்டுகளோ இல்லை என லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கோவையில் எங்கள் இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ98,820 மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான சட்டப்பூர்வ கைப்பற்றுதல் படிவமானது வருமான வரித்துறையின் உதவி இயக்குநரால் முத்திரையிடப்பட்டு கையொப்பமிட்டு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டினுள் பாதாள அறையோ, கட்டிலோ அல்லது படிகட்டுகளோ இல்லை இது தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அந்த செய்தி காணோளிக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க