• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எனது தந்தையை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர் – காசாளர் பழனிசாமியின் மகன் ரோகின் குமார் புகார்

May 4, 2019 தண்டோரா குழு

எனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்யவில்லை, அவரை திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர் என லாட்டரி மார்டினின் காசாளர் பழனிசாமியின் மகன் ரோகின் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

மார்டின் குரூப் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த பழனிச்சாமி என்பவர் நேற்று காரமடை அருகே குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், நீதிபதி முன்னிலையில் சடல விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும், இறந்தவரின் மகன் ரோகின் குமார் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் மனு அளித்தார். மேலும் மருத்துவக்கல்லூரி மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உடற்கூறு ஆய்வு செய்வதை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

எனது தந்தை தற்கொலை செய்யவில்லை என்றும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. மார்டின் நிர்வாகத்தில் வேலை செய்யும் உயர் அதிகாரிகள் இருவர் மீது சந்தேகம் உள்ளது. வருமானவரி துறை அதிகாரிகளால் என் தந்தையை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். வருமானவரி துறை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதும், கடுமையான வார்த்தைகள் பேசியதும் என் கண்களால் பார்த்தேன் எனவும் புகார் தெரிவித்தார்.வருமானவரி துறையில் இருந்து எங்கள் வீட்டிற்கு 7 பேர் வந்தனர். அதில் ராஜன் என்பவர் என் தந்தையின் கன்னத்தில் அடித்தார். எனது வீட்டில் இருந்து எவ்வித ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றப்படவில்லை என்றார்.

மேலும், எனது மூன்று கோரிக்கை வைத்து உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்றும் அதுவரை உடலை வாங்கமாட்டோம். தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் என் தந்தையின் உடலில் காயம் உள்ளது, எனவே தண்ணீரில் மூழ்கி இறந்தவருக்கு தலையில் மூக்கில் காயம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் சுட்டிக் காட்டினார். மனுவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜனிடம் வழங்கியதாகவும், இம்மனுவை பெரியநாயக்கன்பாளையம் காவல் கண்கானிப்பாளரிடம் வழங்கி அவர் மூலம் ஆர் டி ஒ விசாரணை நடத்த நிதிபதி அறிவுறுத்தியுள்ளாதாகவும் கூறினார்.

மேலும் படிக்க