May 1, 2019
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில்,மே தினவிழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
தொழிலாளர் தினமான இன்று சிஐடியு தொழிற்சங்க அமைப்புகள் சார்பில், மே தினம் கொண்டாடப்பட்டது.மேட்டுப்பாளையம் தாலுகா பொது தொழிலாளர் சங்கம் சார்பில் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் மே தின கொடியேற்று விழா நடந்தது. இதில் சங்க பொது செயலாளர் S,பாஷா தலைமை வகித்து மேதின சிறப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில்தலைவர் ராஜன் துணைச் செயலாளர் J, சம்சுதீன் முன்னிலை வகித்தார்.
தொழிற்சங்க துணைத் தலைவர் சின்ராஜ் கொடியேற்றினார்.ஓய்வுபெற்ற ஆசிரியர்
சுப்பிரமணி அவர்கள்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பஸ் நிலையம் பாரம் தூக்கும் தொழிற்சங்க நிர்வாகிகள் பழனிச்சாமி, செல்லான் ராஜசேகர், கார் சங்கம் ரூமி ரகு, தூய்மைப் பணியாளர் சங்கம், பண்ணாரி மாரியப்பன் சாலையோர வியாபாரிகள் சங்கம்,
லட்சுமி வசந்தா ஈஸ்வரி ஆட்டோ சங்க நிர்வாகிகள் கனி கண்ணன் ஜெயபால் மூர்த்தி சிமெண்ட் குடோன் ராஜன் பூபதி மற்றும் சிஐடியு சங்க உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.