April 30, 2019
தண்டோரா குழு
எதிர்கட்சி தலைவர் சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பேரவை செயலாளரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் உள்ள 114 எம்.எல்.ஏ.க்களில் விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர். இதையடுத்து, அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்ட 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், சபாநாயகர் தனபால் 3 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்ததார். இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சபாநாயகர் மீது நம்பிக்கையில்ல்லா தீர்மானத்தை முன்மொழிந்து எதிர்க்கட்சி தலைவர் அளித்த மனுவை பேரவை செயலாளரிடம் அளித்தோம். ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.