• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 40 பேர் தங்களுடன் தொடர்பில் உள்ளனர் – மம்தாவிற்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

April 29, 2019 தண்டோரா குழு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 40 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்கள் மக்களை வாக்களிக்க விடமால் தடுக்க முயற்சிப்பதுடன், பாஜக தலைவர்களையும் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்து பாஜக தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது அனைத்து இடங்களிலும் தாமரை மலரும்.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 40 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருக்கின்றனர். மக்களவை தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் கட்சியில் விலகி பாஜவில் இணைய போகிறார்கள். மம்தா அரசியலில் சறுக்கப்போகிறார்.மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு முதலமைச்சராக இருக்க முடியாது. மம்தாவால் கனவில் கூட பிரதமர் ஆக முடியாது. குறைந்த அளவிலான சீட்டுகளை வைத்துக் கொண்டு டெல்லிக்கு அவரால் வர முடியாது. அனுமதி முதல் சேர்க்கை வரை அனைத்து விதத்திலும் மம்தாவின் அரசால் மக்கள் பணத்தை இழக்கிறார்கள். மம்தாவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது அதனால் தான் அவருக்கு அடிக்கடி கோபப்படுகிறார்.

என்னை மட்டும் அவதூறாக பேசி வந்த எதிர்க்கட்சிகள், தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும் குறை கூறி பேசி வருகிறார்கள். இந்த தேர்தலில் தோல்வி கிடைத்துவிடும் என எதிர்கட்சிகள் அஞ்சுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க