April 27, 2019 தண்டோரா குழு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ.விசாரணையைத் தொடங்கியது.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், மணிவண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் கீழ் உள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்த நிலையில் சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைத்தது.எனினும் தற்போது வரை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தற்போது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணையை தொடங்கியது.