• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் பாஜகவினர் பிரம்மாண்ட பேரணி – லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

April 25, 2019 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில், பிரம்மாண்டப் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களம் இறங்கும் பிரதமர் மோடி நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதற்காக இன்று மாலை வாரணாசி வந்தார். இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி, வாரணாசி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 6 கிமீ தூரம் பிரம்மாண்டப் பேரணியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்காளர்களிடையே வாக்கு சேகரித்தார். இந்தப் பேரணியில், லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

பேரணியில் பா.ஜ., தலைவர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கின்றனர். பேரணி துவங்கும் இடத்திற்கு வந்த பிரதமர் அங்கு இருந்த மாளவியா சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும், இப்பேரணியில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் , தேனி லோக்சபா தொகுதி அ,.தி,மு.க., வேட்பாளருமான ரவீந்திரநாத்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க