கோவையில் பல கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழுகிய மற்றும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட கிலோ பழங்களை பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகரில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகா தலைமையிலான குழுவினர் கோவை கருப்ப கவுண்டர் வீதி,பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர் .அப்போது பல்வேறு கடைகளில் அழுகிய மாம்பழம் மற்றும் ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற பழங்களும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சுமார் 220 கிலோ எடையிலான மாம்பழங்கள்,34 கிலோ மாதுளை,65 கிலோ ஆரஞ்சு மற்றும் 32 கிலோ சாத்துக்குடி ஆகிய பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை வேதி பொருட்கள் மூலம் அழித்தனர்.மேலும் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது