April 24, 2019
தண்டோரா குழு
இலங்கையில் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஐபிஏ ஆலயம் சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும் 400 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு அனுதாபம் மற்றும் சமாதானம் நிகழ்ச்சி, உயிர் நீத்த ஆன்மாக்கள் சாந்தி அடையவும் காயம் அடைந்தவர்களுக்கு பூர்ண குணம் அடைய பிரார்த்தனை தெரிவிக்கும் வகையிலும் கோவை ஐபிஏ பெத்தேல் தி௫ச்சபையில் சமாதான பிராத்தனை நிகழ்ச்சி போதகர் டேவிட்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.
இதில் உதவி போதகர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் மற்றும் பெண்கள் பலர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் பங்கேற்றனர்.