April 24, 2019
தண்டோரா குழு
நாம் தமிழர் கட்சி சார்பில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்த நிலையில் காலியாக உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்மே 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில்4 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் – ரா.ரேவதி
ஒட்டப்பிடாரம் – மு. அகல்யா
சூலூர் – வெ.விஜயராகவன்
அரவக்குறிச்சி – பா.க.செல்வம்