• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வங்கக்கடலில் உருவாகிறது புயல்’- சென்னை வானிலை ஆய்வு மையம்

April 23, 2019

வங்கக்கடலில் உருவாகிறது புயல்’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்.

அப்போது பேசிய அவர்,

அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, நெல்லை, குமரி, திருவாரூர், தஞ்சை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். உள்தமிழகத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. தேனியில் 6 சென்டி மீட்டர் மழையும் திருவண்ணாமலை 5 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 25-ம் தேதி இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று ஏப்ரல் 29-ம் தேதி புயலாக மாறும். இதனால் 29ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றார்.

மேலும் படிக்க