• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

April 22, 2019 தண்டோரா குழு

இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். அவிநாசி சாலை உள்ள தனியார் கல்லூரியில் லேப் அஸிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறாமல் இருந்தது. இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெறபட்டு வரும் நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த செந்தில்குமார் அவரது மனைவி தேன்மொழி அவர்களது இரு மகன்கள் ஜெய் ஆதித்யா மற்றும் ஜீவன் ஆதித்யா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

தங்களுக்கு சூலூர் அரசு மருத்துவமனை அருகில் 30 செண்ட் பூர்வீக இடம் இருந்ததாகவும் அதில் பெரும்பாலான இடத்தை தங்களது பாகத்தை விற்று விட்டதாக தெரிவித்தனர். இதில் தங்களுக்கு மூன்றரை செண்ட் இடம் இருப்பதாகவும் அதனை தற்போது சிலர் அபகரிக்க முயல்வதாகவும் அதில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் மற்றும் அவரது கணவர் தூண்டுதலின் காரணமாக கூறியவர்கள் இது குறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக தெரிவித்தனர்.

மேலும், இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் தங்களை ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் கூறிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க