• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்காவிட்டால் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும்: உச்சநீதிமன்றம்

April 22, 2019 தண்டோரா குழு

ஏப்.24ம் தேதிக்குள்உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்காவிட்டால் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான டிக்டாக் செயலியை கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வருகிறது.இதற்கிடையில், டிக்டாக்’ செயலியில் கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் எனவும், அதில் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இதற்கிடையில், அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், “டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது என தெரிவித்தார்.மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு, பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் தடை விதித்து இருப்பதால், தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

இதையடுத்து, டிக்டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் தடை நீக்க மறுத்துவிட்டனர்இதனைத்தொடர்ந்து ஆப்பிள், கூகுள் நிறுவனத்திற்கும் நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.இதனால் இந்தியாவில் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் டிக் டாக் செயலி நீக்கப்பட்டது.

இதற்கிடையில், ‘டிக் டாக்’ நிறுவனம் தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிக் டாக்’ நிறுவன மனுவை விசாரித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்.அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம், டிக் டாக் செயலி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அச்செயலிக்கான தடை தானாகவே விலகியதாக கருதலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க