• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓட்டு போட்டால் பார்க்கிங் கட்டணம் இலவசம் கோவையில் உள்ள மால்கள் அறிவிப்பு !

April 17, 2019 தண்டோரா குழு

கோவையில் நாளை 17 வது மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மால் மூடப்படும் என்றும், வாக்களித்ததற்கான அடையாளமான விறல் மையை காண்பித்தால் பார்க்கிங் கட்டணம் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மால்கள் அறிவித்துள்ளது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள prozone மால் இயங்கி வருகிறது. நாளை மக்களவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மாலை 6 மணி வரை மால் முழுவதும் மூடப்படும் என்று மால் நிர்வாகம் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாலை மாலுக்கு வரும் பொதுமக்கள் வாக்களித்ததற்கான அடையாளமான விறல் மையை காண்பித்தால் நாளை (18 -04 -19 ) மாலை 6 மணி முதல் அடுத்த நாள் (19 -04 -19 ) வரை பார்க்கிங் கட்டணத்தை செலுத்தாமல் இலவசமாக பார்க்கிங் நிறுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

அதைபோல் கோவை புரூக் பாண்ட் சாலையில் உள்ள புரூக் பீல்டு மாலிலும் இதேபோல் மாலை மாலுக்கு வரும் பொதுமக்கள் வாக்களித்ததற்கான அடையாளமான விறல் மையை காண்பித்தால் நாளை (18 -04 -19 ) மாலை 6 மணி முதல் அடுத்த நாள் (19 -04 -19 ) வரை பார்க்கிங் கட்டணத்தை செலுத்தாமல் இலவசமாக பார்க்கிங் நிறுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தவறாமல் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தி வந்த நிலையில், அரசுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் கோவையில் உள்ள மால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க