• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 470 வாக்குசாவடிகள் பதற்றமானவை – மாவட்ட ஆட்சியர் இராசாமணி

April 16, 2019 தண்டோரா குழு

கோவையில் 470 வாக்குசாவடிகள் பதற்றமானவை. அங்கு கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் அரசு ஊழியர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் இராசாமணி,

வாக்கு பதிவிற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. கோவையில் 3070 வாக்கு சாவடிகள் உள்ளன. அதில் 470 வாக்குசாவடிகள் பதற்றமானதாக அறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் மைக்ரோ அப்ஸ்சர்வர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். 1880 வாக்குசாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு 68.16% வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் 100 % வாக்குகள் பதிவாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் புதிய வாக்காளர்கள் படியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 150 பறக்கும் படையினர் களத்தில் உள்ளனர். இதுவரை 12 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் மூன்றே கால் கோடி ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா நடக்க இருப்பதாக கூறப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க