• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வீதி வீதியாக நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்

April 12, 2019 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வீதிவீதியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ச்சுனன் 51 வது வார்டு பகுதியான காந்திபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர்,

மத்திய, மாநில அரசுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது தான் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறும். நமது கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது காந்திபுரம் பகுதி செயலாளர் அசோக்குமார், தேமுதிக வார்டு செயலாளர் சீனிவாசன் பகுதி கழக செயலாளர் ஆனந்தகுமார் உட்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க