• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 41 இலட்ச ரூபாய் பணம் மற்றும் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்

April 11, 2019 தண்டோரா குழு

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 41 இலட்ச ரூபாய் பணம் மற்றும் உரிமம் இல்லாத இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சாய்பாபாகாலணி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வந்த பாங்க் ஆப் பாரோடா வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஏடிஎம் மையங்களில் நிரப்ப 41 இலட்ச ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பாதுகாவலர்கள் சுப்பிரமணி மற்றும் திருஞானம் ஆகியோரிடம் உரிமம் இல்லாத இரண்டு துப்பாகிகள் மற்றும் தோட்டாக்களையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்திற்கான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதை அடுத்து, பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஆயுதப்படையில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க