கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் தமாகா தலைவர் ஜி.கே வாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
கோவை பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.நடைபெற உள்ள தேர்தல் என்பது நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல்.மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தை உயர்த்தும் நல்லரசாக செயல்பட்டு வருகிறது.
நல்லரசாக உள்ள அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும் நாட்டின் வளர்ச்சியை மிக சிறப்பாக செயல்படுத்துகிறது.
பாதுகாப்பை உறுதிபடுத்குகிற அரசு பாஜக தலைமையிலான மத்திய அரசு.
தமிழகத்தில் எடப்பாடி ஓபிஎஸ் அனைத்து மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக செயல்பட்டு வருகின்றனர்.மத்திய மாநில அரசுகளின் ஒத்த கருத்து என்பது முன்னேற்றத்திற்கு அழைத்து செல்லும்.
கவுண்டம்பாளையம் பகுதியில் ஆக்கப்பூர்வமான திட்டங்களை செய்யும் அரசாக அதிமுக அரசு உள்ளது.சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக வை சேர்ந்தவர்கள் அடிக்கடி மக்களைசந்திப்பவர்கள். அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை பெற்று தருவார்கள்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி