April 10, 2019
தண்டோரா குழு
இந்தியாவில் இதுவரை தேர்தல் பறக்கும் படையால் ரூ.2385.65 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. எனவே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.
இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு தேர்தல் பறக்கும் படையானரால் இந்தியா முழுவதும நடத்திய சோதனையில் இதுவரை கணக்கில் தெரிவிக்கப்படாத ரூ2385.65 கோடி மதிப்பிலான பணம், தங்கம், மது மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.468.72 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.