• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜாலியன் வாலாபாக் படுகொலை 100வது ஆண்டு தினத்தையொட்டி இங்கிலாந்து வருத்தம் !

April 10, 2019 தண்டோரா குழு

ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.

இந்திய சுதந்திர வரலாற்றில் தற்போது வரை யாரும் மறக்க முடியாத நிகழ்வு என்றால் அது ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் தான். 1919 ஏப்ரல் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பிரிட்டிஷ் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஜெனரல் டயர் என்பவனின் உத்தரவின்பேரில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 1000 பேர் உயிரிழந்தனர்; 1500 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அரசு சார்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த துயரசம்பவத்திற்கு முழுமையாக மன்னிப்பு கேட்பது எனவும் மன்னிப்பு கோருவதன் மூலம் இரு நாடுகளிடையே நட்புறவு வலுப்பெறும் என எம்.பிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் படிக்க