• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்திய விவகாரம் – 11 மீது வழக்குப்பதிவு

April 10, 2019 தண்டோரா குழு

கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தியதுடன், ஓட்டுநரை தாக்கிய சம்பவம் தொடர்பாக மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை ஆத்துப்பாலத்தில் நேற்று முன்தினம் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக எழுந்த வதந்தியால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் கூடினர். பின்னர், அந்த லாரியை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கண்டெய்னரில் டீத்தூள் மட்டுமே மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது.

இந்த நடவடிக்கையின் காரணமாக, சம்பந்தப்பட்ட தேயிலை நிர்வாகத்திற்கு ரூ. 45 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தின் போது கண்டெய்னர் லாரி ஓட்டுநர் பிரகாஷ் என்பவரை மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் முகமது சாஜீத் தாக்கியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக, குனியமுத்தூர் போலீசில் ஓட்டுநர் பிரகாஷ் புகார் அளித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் முகமது சாஜீத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கண்டெய்னர் லாரியை சிறை பிடிக்கப்பட்ட விவகாரத்தில் நேற்று மக்கள் நீதி மையத்தின் உறுப்பினர் முகமது சாஜித் மற்றும் ஃபிரோஸ்கான் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், தற்போது மேலும் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சி.ஐ.டி.யு. மற்றும் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க