• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்

April 10, 2019 தண்டோரா குழு

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சத்தி சாலையில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செகுர் வெல்யு என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததும், ஏடிஎம் மையங்களில் நிரப்ப பணம் எடுத்துச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.

எனினும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ள அதிகாரிகள், பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க