கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சத்தி சாலையில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செகுர் வெல்யு என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததும், ஏடிஎம் மையங்களில் நிரப்ப பணம் எடுத்துச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.
எனினும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்களை சமர்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ள அதிகாரிகள், பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்