பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளைகளிடம் நட்பாக பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க டிஜிபி உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. எனினும் தற்போது வரை சிபிசிஐடி போலீசாரே இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில்,பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சீலிட்ட உறையில் உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
மேலும்,சிபிஐ விசாரிப்பது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கி பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணை தங்களுக்கு வரவில்லை என சிபிஐ தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய அரசாணையை மனுதாரர் தரப்புக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவ்வழக்கை நீதிமன்றம் ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்