April 9, 2019
தண்டோரா குழு
நதிகள் இணைப்பு என பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜக நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
தேர்தல் அறிக்கை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்து இல்லம் அருகே
நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நதிகள் இணைந்தால் நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலைகிடைக்கும்.வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே இதை நான் வலியுறுத்தினேன்.
பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது கமல்ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது,என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏதாவது வெளியிட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என கூறினார்.