April 8, 2019
தண்டோரா குழு
கோவை ஆத்துப்பாலம் அருகே வேகமாக வந்த கண்டெய்னர் லாரி அங்கிருந்த பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையாடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே வேகமாக வந்த கண்டெய்னர் லாரி அங்கிருந்த பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
இதற்கிடையில், கண்டெய்னரில்
பணம் இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்திருந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டெய்னர் லாரி டீ தூள் இருப்பதாகவும் ஓட்டுனர் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கண்டெய்னர் லாரியில் பணம் கடத்தும் கலாச்சாரம் இருந்து வரும் நிலையில் கோவையில் கண்டெய்னர் லாரி ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.