• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேர் போஸ்கோ சட்டத்தில் கைது

April 6, 2019 தண்டோரா குழு

போத்தனூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவர்கள் உட்பட நான்கு பேரை போஸ்கோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 9 வயது மகள் பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (60) பள்ளி மாணவர்கள் மூன்று பேருடன் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனை சிறுமி அம்மாவிடம் கூறி உள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாய் கொடுத்த புகார் அடிப்படையில் புளியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்யப்பட்ட மூன்று பள்ளி மாணவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். செல்வராஜை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க