• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்துக்கள் ஓட்டு யாருக்கு?-இந்து முன்னணி அமைப்பு சார்பில் இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்

March 30, 2019 தண்டோரா குழு

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் நூறு சதம் வாக்களிக்க கோரி இந்துமுன்னணி அமைப்பு சார்பில் கோவையில் நடைபெற்ற இந்து முன்னனி ஊழியர் கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

இந்துக்கள் ஓட்டு யாருக்கு என இந்து முன்னணி அமைப்பு சார்பில் இந்து விழிப்புணர்வு ஊழியர் கூட்டம்அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கோவை காந்தி பார்க் பகுதியிலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி தொண்டர்கள் மற்றும் பெண்க்ள் திரளாக பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியம்,

இந்து விரோத கொள்கையை கொண்ட காங்கிரஸ் திமுக கூட்டணியை புறக்கணித்து இந்துக்களுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தனி தனியே குழுக்கள் அமைத்து 100 சதவிகிதம் வாக்களிக்க பொதுமக்களுக்கு விஈப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

மேலும், பயங்கரவாதிகளை துணிந்து அழித்து நாட்டு மக்களுக்கு அரணாக திகழக்கூடிய பாஜக அரசு மீண்டும் நிலையான ஆட்சியை அமைக்க வேண்டும். அப்போது தான் சர்வதேச தரத்தில் நமது நாட்டின் மதிப்பு உயரும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க