March 23, 2019
அவர்கள் விலகுவதாக சொல்லவில்லை, அவர்கள் கட்சியின் முக்கிய பொருப்பாளர்கள் அல்ல என, கட்சியின் முக்கிய பொருப்பாளர்கள் விலகுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமலஹாசன் பதிலளித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கோவையில் வேட்பாளர் அறிமுக திருவிழா நாளை நடக்கவிருக்கிறது. அதற்கு வருகின்றவர்களைக் வருக வருக என கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் இருக்காது என்று ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு பதலளித்த கமல், அவர்கள் பிராத்தனையெல்லாம் எங்களின் எதிர்காலம் என்று எண்ண முடியாது.
மேலும் கட்சியில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீட் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், நாளை தெளிவாக விளக்கப்படும், அந்த குறை இருக்காது என்று நம்புகிறேன். அதேபோல் கட்சியில் முக்கிய பொருப்பாளர்கள் விலகுவது குறித்த கேள்விக்கு பதலளித்த அவர்,அவர்கள் விலகுவதாக சொல்லவில்லை,அவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் அல்ல என்றும் கூறினார்.