March 22, 2019
தண்டோரா குழு
சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ கனகராஜ் (64) நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையேயும், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் நேற்று உயிரிழந்ததையடுத்து, சூலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் எண்ணிக்கை 21ல் இருந்து 22 ஆக அதிகரித்துள்ளது.